Wednesday, 3 January 2024

அருகவேலிப் பாறைஓவியங்கள்

 அருகவேலியில் உள்ள சித்திரக்கல் பொடவு என்னும் குகைப்பகுதிக்கு திரு காந்திராஜன்முனைவர் தமிழகன் ஆகியோருடன் அங்குள்ள பாறைஓவியங்களைப் பார்க்கப் போயிருந்தோம். கடினமானப் பயணமாக இருந்தது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் மயிலாடும்பாறையிலிருந்து கிழக்கே கி.மீ தொலைவில் மலையின் அடிவாரத்தில் உள்ளது அருகவேலி எனும் சிற்றூர்.
இவ்வூரின் வடமேற்கு பகுதியிலுள்ள பாறைகளின் வழியாக இம்மலைக்குப் போகலாம். இந்த மலையில் சித்திரக்கல் பொடவு’ என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் குகை உள்ளது. இந்தக்குகையின் பாறைகளில் வெள்ளை மற்றும் செந்நிற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இங்கு ஒரு குழு ஓவியக்காட்சி சிறப்பானதாகத் தெரிகிறது. அதில் குதிரையின் மீது அமர்ந்து இரு கைகளையும் மேலே தூக்கியவாறும்கையில் ஏதோ ஆயுதமேந்திய வடிவில் ஒரு உருவமும்அதற்கு பின்னால் அதேபோல் குதிரையில் அமர்ந்து கைகளைத் தூககி்யவாறுள்ள மூன்று உருவங்களும் உள்ளன. இக்காட்சி சண்டையில் வெற்றியடைந்துத் திரும்பும் குழுவை நினைவுபடுத்துவதாக உள்ளது.
மற்றொரு தொகுதி ஓவியங்கள் குகையின் மேல்கூரையில் வரையப்பட்டுள்ளன. மனிதஉருவத்தைச் சுற்றிலும் காளைமான்கள்மாடுகள்கேளஆடுமுயல்கோழிகளின் உருவங்கள் உள்ளன. அவற்றில் சில வெள்ளை நிறத்தால் நிரப்பப்பட்டும்சில கோட்டுருவங்களாகவும் காணப்படுகின்றன.
இவ்வோவியங்களை கண்டறிந்த புதுச்சேரிப் பல்கலைகழக பேராசிரியர் திரு பாலமுருகன் இவ்வோவியங்கள் இரும்பு காலத்தை (பொ.ஆ.மு 1500 - 500) சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கணித்திருக்கிறார். இத்தொகுதி ஓவியங்களின் காலத்தை கணித்த பாறை ஓவியங்கள் ஆய்வாளர் திரு கே.டி.காந்திராஜன் அவர்கள் இவை புதியகற்காலத்தைச் (NEOLITHIC PERIOD) சேர்ந்தவையாக இருக்கலாம் அதாவது பொ.ஆ.மு 4000 - பொ.ஆ.மு 1000 காலகட்டம். இக்கருத்துக்குரிய தொல்லியல் சான்றுகள் அருகில் கண்டறியப்படவில்லை என்றாலும்ஓவியத்தின் அமைப்பை(STYLE) வைத்துக் காலத்தைக் கூறுவதாகத் தெரிவிக்கிறார்.
இக்குகையைச் 'சித்திரக்கல் புடவுஎன இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். சித்திரம் - ஓவியம்புடவு - குகை அதாவது ஓவியங்கள் வரையப்பட்ட குகை என்று பொருள்.
(Rockart at Arugaveli, Theni Dist. Tamilnadu)
பாலா பாரதி





No comments:

Post a Comment