விழுப்புரத்திலிருந்து திருகோவிலூர் செல்லும் சாலையில் 23 ஆவது கிலோ மீட்டரில் உள்ள சிறிய ஊர் ஆலம்பாடி. இவ்வூருக்கு வெளியே மானாவாரிக் கொல்லையின் நடுவில் அமைந்த குன்றில் பாறைஓவியங்கள் காணப்படுகின்றன.
இங்கு விலங்கின ஓவியங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றுள் மான், காளைமாடு, பன்றி போன்ற ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை.
மான் கூட்டமொன்று புல்வெளியில் நுழைவது போன்ற ஓவியம் காணப்படுவது சிறப்பு. சிறிய மானுருவம் ஒன்று மிக அழகாக வரையப் பட்டுள்ளது. இங்கு இரண்டு அடுக்கு வண்ணப்பூச்சு முறையையும் காணமுடிகிறது, இதனால் தொன்மையான ஓவியங்களின் எஞ்சிய தடயங்கள் மீது மீண்டும் மீண்டும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதலாம்.
மேலும் இங்குப் பல்லிபோன்ற வடிவில் பெரிதாக வரையப்பட்ட ஓவியமும் முகமூடி போன்ற ஓவியமும் உள்ளன.
மான் கூட்டமொன்று புல்வெளியில் நுழைவது போன்ற ஓவியம் காணப்படுவது சிறப்பு. சிறிய மானுருவம் ஒன்று மிக அழகாக வரையப் பட்டுள்ளது. இங்கு இரண்டு அடுக்கு வண்ணப்பூச்சு முறையையும் காணமுடிகிறது, இதனால் தொன்மையான ஓவியங்களின் எஞ்சிய தடயங்கள் மீது மீண்டும் மீண்டும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதலாம்.
மேலும் இங்குப் பல்லிபோன்ற வடிவில் பெரிதாக வரையப்பட்ட ஓவியமும் முகமூடி போன்ற ஓவியமும் உள்ளன.
- பாலா பாரதி
No comments:
Post a Comment