Wednesday, 3 January 2024

காமயக்கவுண்டன்பட்டி பாறைஓவியங்கள்

 தேனி மாவட்டம்உத்தமபாளையத்திற்கு அருகிலுள்ள காமயக் கவுண்டன்பட்டிப் பாறை ஓவியங்களைப் பார்க்க திரு. காந்திராஜன்தமிழகன் ஐயாவுடன் போயிருந்தோம். ஊருக்கு வெளியே சங்கிலிக்கரடு என்னும் மலைக்குக் கீழே சங்கிலிக்கருப்பர் கோயில் உள்ளது. அக்கோயிலிருந்து பார்த்தால் மலையின் மீது புடவு ஒன்றுத் தெரிகிறது.

வழிமாறி சுற்றித்திரிந்து ஒருவழியாக அப்புடவிற்குப் போய்ச் சேர்ந்தபோது மாலையாகிவிட்டிருந்தது. மேலும் மலை உச்சியில் தேன்கூடுகளும் அச்சுருத்திக் கொண்டிருந்தனஎனவே கேமராவில் பிளாஸ் பயன்படுத்த முடியாத நிலைசத்தமில்லாமல் சில படங்களை மட்டும் எடுத்துக் கொண்டு விரைவாக இறங்க ஆரம்பித்துவிட்டோம்.
நண்பர்களே! இத்தகைய இடங்களுக்குப் போகும்போது காட்டு விலங்குகள் மற்றும் தேனீக்களின் அச்சுருத்தலுக்குத் தக்கவாறு தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் செல்ல வேண்டாம். தேன்கூடு கலைந்தால் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.
மனித உருவங்கள்விலங்குகள்படகின்மீது நிற்கும் மனிதன்விலங்கின் மீது உட்கார்ந்த நிலையில் மனிதன்உட்பட பல ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன.
பாலா பாரதி



No comments:

Post a Comment